தொல்காப்பிய மென்னும் இப்பேரிலக்கண நூலைச் செய்த தொல்காப்பியர், சமதக்கினி முனிவர் புதல்வர் என்பதும், இவரியற்பெயர் திரணதூமாக்கினியார் என்பதும் இந் நூற்பாயிரத்துள் "சமதக்கினியாருழைச்சென்று அவர் மகனார் திரணதூமாக்கினியாரை வாங்கிக்கொண்டு," என்று நச்சினார்க்கினியர் கூறுதலானே அறியக்கிடக்கின்றன. இன்னும், அப்பாயிரத்துள் 'தொல்காப்பியன்' என்பதற்குப் 'பழைய காப்பியக் குடியிற் பிறத்தலின் தொல்காப்பியன் என்று பெயராயிற்று' என்று கூறுதலானே காப்பியக் குடியிற் பிறந்தவரென்பதும், சமதக்கினி புதல்வ ரென்பதனானே அந்தண குலத்தவ ரென்பதும் அறியத்தக்கன. சமதக்கினி புதல்வரென்றதனானே பரசுராமர் இவர் சகோதரராவா ரென்பதும் பெறப்படும். இராமயணத்துள்ளே பரசுராமர் இராமரோடு போரை விரும்பிச் சென்று அவருக்குத் தோற்றதாகவும், அவருக்கு மிக முந்தினவராகவும் அறியப்படுதலினாலும், இராமராற் சீதையைத் தேடும்படி அனுப்பப்பட்ட குரங்குப்படை இடைச்சங்க மிருந்த கபாடபுரத்தை யடைந்து சென்றதாக அறியப்படுதலினாலும், இடைச்சங்கப் புலவர்களா யிருந்தோர் அகத்தியருந் தொல்காப்பியரும் முதலாயினோர் என்று இறையனா ரகப்பொருளுரை முதலியவற்றா னறியப்படுதலினாலும், தொல்காப்பியரும் இராமர் காலத்துக்கு மிக முந்தியவ ரென்பதும், தொல்காப்பியரிருந்து பல்லாயிரம் யாண்டுகள் சென்றனவென்பதும் அறியத்தக்கன. ஆயினும் இக்காலத்துச் சரித்திர ஆராய்ச்சிக்காரருட் சிலர், மூவாயிரம் ஆண்டு என்றும் ஆறாயிரம் ஆண்டு என்றும் இப்படிப் பலவாறாகக் கூறுகின்றனர். தொல்காப்பியப் பொருளதிகாரப் பதிப்பாளர், ராவ்பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளை யவர்கள் அப் பொருளதிகாரப் பதிப்புரையில் பன்னீராயிரம் ஆண்டுகளுக்குக் குறையாதென்று கூறியிருக்கின்றனர். தமிழ் இலக்கிய வரலாறு எழுதிய சுப்பிரமணியபிள்ளை யவர்கள் கி.மு. 700 ஆண்டுகளுக்குப் பிற்படா தென்கின்றனர். எவ்வாறு கூறினும் இவர் காலம் 12,000 ஆண்டுகளுக்கு மிக முற்படுமன்றிப் பிற்படாது.
இனி, இடைச் சங்கத்தார்க்கு இந் நூல் இலக்கணமாக இருந்ததாக அறியப்படுதலானே முதற்சங்கத் திறுதியில் இத் தொல்காப்பியம் இயற்றப்பட்டிருத்தல் வேண்டும் என்பது ஆராய்ந் துணரத் தக்கது.
இவர் வடமொழியையும் நன்கு கற்றவர் என்பது 'ஐந்திர நிறைந்த தொல்காப்பியன்' என்பதனா னறியத் தக்கது. இவர் அகத்தியரோடு தென்னாடு புக்கபின் அவர்பாற் செந்தமிழ் இலக்கிய விலக்கணங்களைக் கற்று அவருடைய முதன் மாணாக்கராய் விளங்கினர். அகத்தியர்பால் இவருடன் கற்றவர்கள் அதங்கோட்டாசிரியர் பனம்பாரனார் செம்பூட்சேய் வையாபிகர் அவிநயனார் காக்கைபாடினியார் துராலிங்கர் வாய்ப்பியர் கழாரம்பர் நற்றத்தர் வாமனர் என்னும் பதினொருவருமாவர். தொல்காப்பியர் முதலாகப் பன்னிருவர் அகத்தியர் பால் ஒருங்கு கற்றனர் என்பது,
கொங்கு வெள்ளாளர் மரபுகளையும் சீர் முறைகளையும் வரலாற்றையும் நல்ல முறையில் ஆராய்ந்து சிறந்த முறையில் கூறியுள்ளிர்கள் வாழ்த்துக்கள் தொடர்ந்து உங்கள் ஆராய்ச்சி நல்ல முறையில் நடைபெற எல்லாம் வல்ல பரமேச்வரனை பிரார்த்திக்கிறேன்
புலத்தியர் தொல்காப்பியர் கிடையாது... அவர் இராவணனின் தந்தை. தொல்காப்பியர் திரணதூமக்கினி எனப்படுவார். அவர் ஜமதக்கினியின் மகன்.
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteதொல்காப்பியர் வரலாறு
ReplyDeleteதொல்காப்பிய மென்னும் இப்பேரிலக்கண நூலைச் செய்த
தொல்காப்பியர், சமதக்கினி முனிவர் புதல்வர் என்பதும், இவரியற்பெயர்
திரணதூமாக்கினியார் என்பதும் இந் நூற்பாயிரத்துள்
"சமதக்கினியாருழைச்சென்று அவர் மகனார் திரணதூமாக்கினியாரை
வாங்கிக்கொண்டு," என்று நச்சினார்க்கினியர் கூறுதலானே
அறியக்கிடக்கின்றன. இன்னும், அப்பாயிரத்துள் 'தொல்காப்பியன்'
என்பதற்குப் 'பழைய காப்பியக் குடியிற் பிறத்தலின் தொல்காப்பியன் என்று
பெயராயிற்று' என்று கூறுதலானே காப்பியக் குடியிற் பிறந்தவரென்பதும்,
சமதக்கினி புதல்வ ரென்பதனானே அந்தண குலத்தவ ரென்பதும்
அறியத்தக்கன. சமதக்கினி புதல்வரென்றதனானே பரசுராமர் இவர்
சகோதரராவா ரென்பதும் பெறப்படும். இராமயணத்துள்ளே பரசுராமர்
இராமரோடு போரை விரும்பிச் சென்று அவருக்குத் தோற்றதாகவும்,
அவருக்கு மிக முந்தினவராகவும் அறியப்படுதலினாலும், இராமராற்
சீதையைத் தேடும்படி அனுப்பப்பட்ட குரங்குப்படை இடைச்சங்க மிருந்த
கபாடபுரத்தை யடைந்து சென்றதாக அறியப்படுதலினாலும், இடைச்சங்கப்
புலவர்களா யிருந்தோர் அகத்தியருந் தொல்காப்பியரும் முதலாயினோர்
என்று இறையனா ரகப்பொருளுரை முதலியவற்றா னறியப்படுதலினாலும்,
தொல்காப்பியரும் இராமர் காலத்துக்கு மிக முந்தியவ ரென்பதும்,
தொல்காப்பியரிருந்து பல்லாயிரம் யாண்டுகள் சென்றனவென்பதும்
அறியத்தக்கன. ஆயினும் இக்காலத்துச் சரித்திர ஆராய்ச்சிக்காரருட் சிலர்,
மூவாயிரம் ஆண்டு என்றும் ஆறாயிரம் ஆண்டு என்றும் இப்படிப்
பலவாறாகக் கூறுகின்றனர். தொல்காப்பியப் பொருளதிகாரப் பதிப்பாளர்,
ராவ்பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளை யவர்கள் அப் பொருளதிகாரப்
பதிப்புரையில் பன்னீராயிரம் ஆண்டுகளுக்குக் குறையாதென்று
கூறியிருக்கின்றனர். தமிழ் இலக்கிய வரலாறு எழுதிய
சுப்பிரமணியபிள்ளை யவர்கள் கி.மு. 700 ஆண்டுகளுக்குப் பிற்படா
தென்கின்றனர். எவ்வாறு கூறினும் இவர் காலம் 12,000 ஆண்டுகளுக்கு
மிக முற்படுமன்றிப் பிற்படாது.
இனி, இடைச் சங்கத்தார்க்கு இந் நூல் இலக்கணமாக இருந்ததாக
Deleteஅறியப்படுதலானே முதற்சங்கத் திறுதியில் இத் தொல்காப்பியம்
இயற்றப்பட்டிருத்தல் வேண்டும் என்பது ஆராய்ந் துணரத் தக்கது.
இவர் வடமொழியையும் நன்கு கற்றவர் என்பது 'ஐந்திர நிறைந்த
தொல்காப்பியன்' என்பதனா னறியத் தக்கது. இவர் அகத்தியரோடு
தென்னாடு புக்கபின் அவர்பாற் செந்தமிழ் இலக்கிய விலக்கணங்களைக்
கற்று அவருடைய முதன் மாணாக்கராய் விளங்கினர். அகத்தியர்பால்
இவருடன் கற்றவர்கள் அதங்கோட்டாசிரியர் பனம்பாரனார் செம்பூட்சேய்
வையாபிகர் அவிநயனார் காக்கைபாடினியார் துராலிங்கர் வாய்ப்பியர்
கழாரம்பர் நற்றத்தர் வாமனர் என்னும் பதினொருவருமாவர்.
தொல்காப்பியர் முதலாகப் பன்னிருவர் அகத்தியர் பால் ஒருங்கு கற்றனர்
என்பது,
"மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத்
தென்மலை யிருந்த சீர்சான் முனிவரன்
தன்பாற் றண்டமிழ் தாவின் றுணர்ந்த
துன்னருஞ் சீர்த்தித் தொல்காப் பியன்முதற்
பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த"
என்னும் புறப்பொருள் வெண்பாமாலைச் செய்யுளாலும்,
"வீங்குகட லுடுத்த வியன்கண்ஞா லத்துத்
தாங்கா நல்லிசைத் தமிழ்க்குவிளக் காகென
வானோ ரேத்தும் வாய்மொழிப் பல்புக
ழானாப் பெருமை அகத்திய னென்னு
மருந்தவ முனிவ னாக்கிய முதனூல்
பொருந்தக் கற்றுப் புரைதப வுணர்ந்தோர்
நல்லிசை நிறுத்த தொல்காப் பியனும்"
என்னும் பன்னிரு படலச் செய்யுளானு மறியப்படும்.
இவரா லியற்றப்பட்ட இத் தொல்காப்பிய மென்னும் நூலுக்கு
உரைசெய்தோராகத் தெரியப்பட்டவர் இளம்பூரணர், கல்லாடர்,
பேராசிரியர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார் என்னும்
அறுவராவர். சேனாவரையரும் தெய்வச்சிலையாரும் சொல்லதிகாரத்திற்கு
மாத்திரமே உரை செய்தனர்.
முன் பக்கம்
கொங்கு வெள்ளாளர் மரபுகளையும் சீர் முறைகளையும் வரலாற்றையும் நல்ல முறையில் ஆராய்ந்து சிறந்த முறையில் கூறியுள்ளிர்கள் வாழ்த்துக்கள் தொடர்ந்து உங்கள் ஆராய்ச்சி நல்ல முறையில் நடைபெற எல்லாம் வல்ல பரமேச்வரனை பிரார்த்திக்கிறேன்
ReplyDelete